Sunday, 30 July 2023

பெட்ரோல், டீசல் போடும்போது கண்டிப்பாக இத கவனிங்க மக்களே!

சென்னை: தற்போது பெட்ரோல், டீசல் விலை என்பது உச்சத்தில் உள்ளது. இதனால் பைக் முதல் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தும் அனைவரும் அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் நாம் பெட்ரோல், டீசல் நிரப்பும்போது முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். இதை செய்தால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு அதிக ‛மைலேஜ்' கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது கடந்த ஓராண்டுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் என்பது செய்யப்படவில்லை .
அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.102.73க்கும், பெங்களூரில் ரூ.101.94க்கும், மும்பையில் ரூ.106.31க்கும், டெல்லியில் ரூ.96.72க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் இன்று சென்னையில் ரூ.94.33க்கும், பெங்களூரில் ரூ.87.89க்கும், மும்பையில் ரூ.94.27க்கும், டெல்லியில் ரூ.89.62க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை என்பது தற்போதைய விலையை விட குறைந்து இருந்தது. இதனால் தற்போது வாகனங்களை பயன்படுத்தும் மக்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் கூட கடந்த ஓராண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் அப்படியே தொடருவது சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும் நாம் அதன் தரத்தை ஒருபோதும் சோதனை செய்தது இல்லை. வாகனங்கள் அத்தியாவசியமாக இருப்பது மற்றும் தினமும் பெட்ரோல், டீசல் போடுகிறோம் என்பதால் அதன் தரத்தை பரிசோதிப்பதே இல்லை. இதனால் பல நேரங்களில் நாம் ஏமாந்து விடுகிறோம்.
அதோடு மட்டுமின்றி தரம் குறைந்த பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்புவது ‛மைலேஜ்' அளவை குறைத்து விடுமாம். இதனால் நாம் அனைவரும் உஷாராகி பெட்ரோல், டீசலின் தரத்தை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். இதை எப்படி செய்வது? என கேட்கிறீர்களா?. ரொம்ப எளிமையான விஷயம் தான் இது.
அதாவது நாம் பெட்ரோல், டீசல் நிரப்பும் இயந்திரத்தை உற்று கவனிக்க வேண்டும். அந்த இயந்திரத்தில் நாம் பெட்ரோல், டீசல் நிரப்பும் அளவும், ஒரு லிட்டர் எரிபொருளின் விலையையும் நமக்கு காட்டும் டிஸ்பிளேயின் அருகே ‛Density' (அடர்த்தி) என ஒரு டிஸ்பிளே இருக்கும். இதனை பெரும்பாலானவர்கள் ஒருபோதும் கவனிப்பது இல்லை. ஆனால் இதுதான் முக்கியம். இந்த ‛Density' அளவு தான் பெட்ரோல், டீசலின் தரத்தை குறிக்கும். அதாவது பெட்ரோலின் Density என்பது 730 முதல் 800 Kg per Cubic Meter (Kg/m3) என்ற அளவிலும், டீசலை பொறுத்தமட்டில் Density என்பது 830 முதல் 900 Kg per Cubic Meter (Kg/m3) என்ற அளவில் இருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அளவில் ‛Density' இருந்தால் அது தரமான பெட்ரோல், டீசல் என கூறலாம். இதன்மூலம் வாகனங்களின் மைலேஜ் அதிகரிக்கவும் செய்யுமாம். மாறாக சில பெட்ரோல், டீசல் நிலையங்களில் அரசு நிர்ணயம் செய்த ‛Density' அளவு பின்பற்றப்படுவது இல்லை என கூறப்படுகிறது. அங்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது அது நமது வாகனங்களின் மைலேஜை குறைத்து நமக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தும். நம்மில் பலர் இதுவரை இந்த விஷயம் தெரியாமல் ஏமாந்து இருக்கலாம். சரி போனது போகட்டும். மாறாக இனி பெட்ரோல், டீசல் நிரப்ப பங்கிற்கு சென்றால் கண்டிப்பாக ‛Density' எனும் டிஸ்பிளேவை பார்த்து நாம் நிரப்பும் பெட்ரோல், டீசல் தரமானதாக இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒருவேளை குறிப்பிட்ட பெட்ரோல், டீசல் பங்கில் சரியில்லை என்றால் அருகே ‛Density' சரியாக இருக்கும் பெட்ரோல் நிலையங்களை தேர்வு செய்து பயன்படுத்துங்கள் மக்களே. எங்கள் Telegram குழுவில் இணையுங்கள்

Friday, 28 July 2023

MYV3ADS இந்த application மூலம் அனைவரும் வருமானம் ஈட்ட முடியும் அதாவது பணம் சம்பாதித்து கொள்ள முடியும்.

My V3 Ads MYV3ADS இந்த application மூலம் அனைவரும் வருமானம் ஈட்ட முடியும் அதாவது பணம் சம்பாதித்து கொள்ள முடியும். அனைவரும் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு யோசனையில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. YouTube மற்றும் Facebook and more social media மற்றும் Google, websites ஆகிய அனைத்து வலை தளங்களிலும் நீங்கள் இதுவரையிலும் தேடிக் கொண்டு வரும் நிலையில் அருமையான Online Earnings Mobile App இருக்கின்றன. இந்த MYV3ADS App பயன்படுத்துவதன் மூலம் உங்களால் எளிதில் வருமானம் ஈட்ட முடியும் மிகவும் சுலபமான வழியில் கேப்சா டைப் செய்தால் போதும் எளிதாக பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று மேலும் பார்க்கலாம். இந்த அப்ளிகேஷன் Play Store மூலம் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும், பின்பு இந்த அப்ளிகேஷன் ஓபன் செய்யும் பொழுது பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும் அவைகளை நீங்கள் அமைக்க முடியாது ஏனெனில் இந்த அப்ளிகேஷன் மூலம் யார் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே உங்களுக்கான பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கித் தர முடியும் அதை வைத்து நீங்கள் இந்த app இல் உள்நுழையெல்லாம்.
பின்பு வீடியோ (Video) என்ற பட்டன் தோன்றும் அதனின் மேல் அழுத்தினால் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்ட நிறுவனம் மூலம் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை சிறிய ஆலோசனைகள் நடைபெறும் என்ன ஆலோசனை என்று கேட்டால் இந்த அப்ளிகேஷனில் மூலம் எப்படி அதிகப்படியான வருமானம் ஈட்டுவது மற்றும் உங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இவர்களை இணைப்பதன் மூலம் உங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும் என்ற ஒரு சில ஆலோசனைகளை கூறுவார்கள் அதன் இடையில் நீங்கள் ஆலோசனைகளை கவனியிருக்கிறீர்களா இல்லையா என்று தெரிந்து கொள்ள வீடியோ பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்களா என்று ஒரு ஆப்ஷன் உங்களுக்கு தோன்றும் அதில் ஆம் (Yes) என கொடுக்க வேண்டும். அதன்பின் விளம்பரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் நிலையில் விளம்பரங்கள் முடிந்த பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்சாக்களை சரியான முறையில் கொடுக்க வேண்டும் இதன் மூலம் உங்களால் வருமானம் ஈட்ட முடியும்.
Opening Member (OM) My V3 Ads -ல் ID பதிவு செய்ய (OM ID) இலவசம், அதற்க்கு எந்த கட்டணமும் கிடையாது. 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். வங்கி கணக்கு மிக அவசியம் ஆகும். இதன் மூலம் நாம் தினம் 5ரூபாய் க்கு விளம்பரம் பார்க்க முடியும். ஒரு முறை மட்டும் 50 முதல் 60 ரூபாய்க்குள் Withdraw செய்யமுடியும். மேலும் தொடர்ந்து நாம் பணத்தை Withdraw செய்ய குறைந்தது பேசிக் மெம்பறாவது (BM) இருக்க வேண்டும்.
Basic Member Purchase MyV3Ads-ல் நாம் இலவசமாக இணைந்து Opening Member (OM) தினம் ரூ5 -ம் அல்லது அந்த நிறுவனத்தில் ரூ480 மதிப்புள்ள ஹெர்பல் Face Care Pack-ஐ வெரும் ரூ360 செலுத்தி Order செயும்போது நீங்கள் வாழ்நாள்முழுவதும் Basic Member (BM) தினம் ரூ7 விளம்பரம் பார்ப்பதன் மூலமாக பெறமுடியும்.
Daily ads earning purchase இந்த MY V3 ADS அப்ளிகேஷனில் விளம்பரம் பார்ப்பதன் மூலமாக அதிகபட்சம் மாதம் 54,000 வரை சம்பாதித்துக் கொள்ள முடியும்.
Star Grade (SG) Program Star Grade (SG) Promotion இதில் SG ப்ரோமோஷன் மற்றும் நெட்வொர்க் வருமானம் உங்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்களை இதில் இணைத்து விடும் பட்சத்தில் உங்களுக்கு சிறிய தொகை வழங்கப்படுவது மற்றும் நீங்கள் சேர்த்துவிட்ட நபர் முதலீடு செய்தால் அதற்கு தனி சிறு தொகை வழங்கப்படும் என பல்வேறு நன்மைகள் இந்த அப்ளிகேஷனில் நிறைந்துள்ளன. அனைவரது மனதிலும் ஒரு குழப்பங்கள் ஏற்படலாம் புகைப்படத்தில் தோன்றியபடி லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாமா இல்லை ஏமாற்று வேலைகள் நடக்குமா என்ற ஒரு சந்தேகங்கள் அனைவரது மனதிலும் பொதுவாக ஏற்படலாம் ஆகையால் அதை தீர்க்கவே ஒவ்வொரு மாவட்டத்திலும் இவர்கள் ஆபீஸ் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன நீங்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கும் நிலையில் உங்களது மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் ஆபீஸ் அணுகவும் அதன் மூலம் நேரடியாக நீங்கள் உங்களது சந்தேகங்கள் குழப்பங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தையும் அவர்களிடம் சமர்ப்பிக்கவும் முடியும்.
முக்கிய குறிப்பு : 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உங்களால் உங்களது வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனைகள் செய்து கொள்ள முடியும் நீங்கள் இலவசமாக சேர்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது Purchase செய்து சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வங்கிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்படும் என்பதை கவனமாக தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த பிளான் மூலம் வருமானம் ஈட்டினாலும் அதில் 10% டூர் வேலட் இல் பணம் பிடிக்கப்படும் அதை நீங்கள் SG ப்ரமோஷன் மூலம் நீங்கள் கம்பெனி மூலம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பொழுது உங்களுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு அந்தப் பணத்தை திருப்பி பெற்றுக் கொள்ள முடியும். மேலும் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்யும் பொழுது 10% சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் பிடித்தம் செய்யப்படும் என்பதையும் கம்பெனி தரப்பில் மிக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் உங்களது வங்கிக் கணக்கிற்கு பரிவர்த்தனை செய்த 15 நாட்களுக்குல் உங்களது வங்கிக் கணக்கில் பணவரவு வைக்கப்படும் (வங்கி கணக்கு சரியாக இருக்கும் பட்சத்தில்) என்பதையும் இந்த இடத்தில் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். வங்கி கணக்கு சரியாக உள்ளீடு செய்யவில்லை என்றால் அதை திருத்தம் செய்ய 300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். எனவே Self Declaration Form Submit செய்யும் பொது மிக பொறுமையாக உள்ளீடு செய்வது அவசியம். பெயர் மாற்றம் , மொபைல் என் மற்றம் இதுபோன்ற திருத்தங்களுக்கு 300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். User ID & Password உங்களுக்கு இலவசமாக பெயர் மற்றும் கடவுச்சொல் உருவாக்கித் தர வேண்டும் என்றால் கீழே தெரியும் வாட்ஸ் அப் நம்பருக்கு MY V3 ADS டைப் செய்து அனுப்பவும். Whatsapp 9597410999
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் எங்கள் Telegram குழுவில் இணையுங்கள்

வருங்காலத்தில் தமிழ்நாட்டில் இனி அனைத்து பள்ளி மாணவர்களுக்குமே சைக்கிள் கிடைக்கும்

11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வரும்நிலையில், முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. நேற்றைய தினம், விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சத்தியக்கண்டநல்லூர், க.பில்ராம்பட்டு, மேலக்கொண்டூர ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் இரு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பொன்முடி பேசினார். பூரிப்பு: அப்போது, நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, நகர்ப்புற மாணவர்களை போன்று கிராமப்பற மாணவர்களும் பள்ளிக்கல்வி முதல் உயர் கல்வி வரை பெற வேண்டும் என்பதற்காக, பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு உபகரணங்கள், ஆய்வகம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன" என்று பெருமிதம் தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடி: இந்நிலையில், இன்று விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் பொன்முடி.. அப்போது பேசும்போது, இனி வருங்காலத்தில் இலவச மிதிவண்டி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்புகளுக்குமே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.. அதன்படி, ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஏராளமான மாணவர்கள் இந்த விலையில்லாத மிதிவண்டிகளை பெற்று வருகிறார்கள்.. ஆனால் கடந்த வருடம் கல்வியாண்டுக்கான இலவச சைக்கிள்கள் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை.. இது தொடர்பாக நிறைய கேள்விகளும் வெடித்து கிளம்பிய நிலையில், முதல்வரே இதற்கு ஒரு பதிலை கூறியிருந்தார்.
அதிரடி அறிவிப்பு: அதன்படி, வரும் 2023 - 2024ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் இந்த உத்தரவுக்கு பிறகு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு, மிதிவண்டிகள் வழங்கப்பட்டும் வருகின்றன.. அதன்படிதான், இன்றைய தினமும் விக்கிரவாண்டி பள்ளியில் சைக்கிள்களை வழங்கினார் பொன்முடி. அப்போதுதான், வருங்காலத்தில் இனி அனைத்து பள்ளி மாணவர்களுக்குமே சைக்கிள் கிடைக்கும் என்று சொல்லி அரசடித்துள்ளார். எங்கள் Telegram குழுவில் இணையுங்கள்

Thursday, 27 July 2023

FEEDFIRE Leakage Waterproof Tape for Pipe Leakage Roof Water Leakage Solution Aluminum Foil Tape Waterproof Adhesive Tape Sealing Butyl Rubber Tape for Surface Crack (SILVER) பற்றிய குறிப்பு

FEEDFIRE Leakage Waterproof Tape for Pipe Leakage Roof Water Leakage Solution Aluminum Foil Tape Waterproof Adhesive Tape Sealing Butyl Rubber Tape for Surface Crack (SILVER) பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு FEEDFIRE Leakage Waterproof Tape பொருட்டு பற்றிய தகவல்களை வழங்கும்:
இதனை Amazon பெற இந்த Link தொடவும் எங்கள் Telegram குழுவில் இணையுங்கள் எங்கள் Whatsapp குழுவில் இணையுங்கள்

Wednesday, 26 July 2023

மது போதையில் இருந்த - நடிகர் ரஜினிகாந்த் கைது..!

விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதால் நடிகர் ரஜினிகாந்தை போலீசார் 1979 ஆம் ஆண்டு கைது செய்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் ரகளை தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரும் சூப்பர் ஸ்டாருமானவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 1979 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் பட ஷுட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். ஷுட்டிங் முடித்தவுடன் விமான நிலையத்திற்கு குடிபோதையில் சென்று இருக்கிறார். அப்போது அவர் நண்பரிடம் தகாத வார்த்தையால் பேசியதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கைது இதனிடையே விமான நிலைய அதிகாரிகள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் ரஜினியை கட்டுப்படுத்த முடியாததால் கண்ணாடி அறையில் இருக்க வைத்துள்ளனர். அப்போது ரஜினிகாந்த் கண்ணாடியை உடைத்து விட்டு அட்டகாசம் செய்தாராம். கடைசியில் ஹைதராபாத் போலீசார் அவரை கைது செய்தனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் பற்றி செய்தி தாள்களில் வெளியான பேப் கட் சோசியல் மீடியா பக்கத்தில் பரவி வருகிறது. எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் எங்கள் Telegram குழுவில் இணையுங்கள்

Tuesday, 25 July 2023

நீங்க Daily Internet யூஸ் பண்ணும் நபரா.. முதலில் இதை படிங்க! வந்தது பரபர வார்னிங்

இணையச் சேவை பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு நெட்டிசன்களை கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது திடீர் வார்னிங் வர என்ன காரணம் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது அனைத்துமே இணையம் என்றாகிவிட்டது. பல ஆயிரம் கொடுத்து புது புது கருவிகளை வாங்குவதில் தொடங்கி 10 ரூபாய் கொடுத்து டீ வாங்குவது வரை அனைத்துமே இணையம் வழியாகவே செய்து கொண்டிருக்கிறோம். இதில் ஏகப்பட்ட நன்மைகள் கொட்டி கிடக்கும் அதே வேலையில் சில பிரச்சினைகளும் இருக்கவே செய்கிறது. இணையத்தால் ஏற்படும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
வார்னிங்: இப்படித்தான் இப்போது புதிதாக நம்மைத் தாக்கும் அகிரா என்ற ஆபத்தான ரேன்சம்வேர் குறித்து மத்திய அரசு நெட்டிசன்கள் எச்சரித்துள்ளது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸில் இயங்கும் கணினிகளைக் குறிவைத்துத் தாக்குகிறது. இதில் இருந்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரேன்சம்வேர் நமது சிஸ்டத்தை தாக்கினால் முதலில் நமது தனிப்பட்ட தகவல்களைத் திருடிவிடும். அதன் பிறகு அவற்றை என்கிரிப்ட் செய்துவிடுகிறார்கள். தரவுகள் வேண்டும் என்றால் பெருந்தொகையைச் செலுத்த வேண்டும் எனக் கேட்பார்கள். மேலும், பணத்தைத் தரவில்லை என்றால் அத்தனை தகவல்களையும் டார்க்வெப்பில் விற்றுவிடுவோம் என்றும் மிரட்டுவார்களாம். விபிஎன் சேவை மூலமாகவே நமது சிஸ்டத்தை இந்த ரேன்சம்வேர் தாக்குகிறது. குறிப்பாக மல்டிஃபாக்டர் ஆத்தென்டிகேஷன் இல்லாத கருவிகள் தான் குறிவைக்கப்படுகிறது. AnyDesk, WinRAR மற்றும் PCHunter என்று பயனாளிகள் சந்தேகமடையாத சாப்ட்வேர்கள் மூலமாகவே அவர்கள் சிஸ்டத்தை ஹேக் செய்கிறார்கள், எச்சரிக்கை: இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சமீபத்தில் அகிரா என அழைக்கப்படும் ரேன்சம்வேர் தாக்குதல் சைபர்ஸ்பேஸில் நடக்க ஆரம்பித்துள்ளது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் என இரண்டையும் குறிவைக்கிறது. இது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து முதலில் தகவல்களைத் திருடி, பின்னர் அந்த தரவை என்க்ரிப்ட் செய்கிறது. தரவுகளைப் பெறப் பணத்தைப் பறிக்கிறது. இல்லையென்றால் டேட்டாக்களை டார்க்வெப்பில் விற்போம் என மிரட்டுகிறது" என்றார் இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் சிஸ்டத்தில் AnyDesk இருக்கும். மேலும், WinRAR மற்றும் PCHunter போன்ற சாப்ட்வேர்களும் நிச்சயம் இருக்கும். எனவே, இதை வைத்தே யாரும் சந்தேகம் கொள்ளாத வகையில் இந்த ஹேக்கர்கள் நமது சிஸ்டத்தை முடக்குகிறார்கள். மேலும் டெக்னிக்கலாக அந்த ரேன்சம்வேர் எப்படிச் செயல்படுகிறது என்பதையும் அவர்கள் அதில் விளக்கியுள்ளனர். பாதுகாப்பாக இருப்பது எப்படி: இணையத்தில் நாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றினாலே இதில் இருந்து நாம் தப்பிக்கலாம். முதலில் தேவையற்ற லிங்குககளை கிளிக் செய்யக் கூடாது. பாதுகாப்பு இல்லாத தளங்களுக்குச் செல்லக் கூடாது. யாரென்றே தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெயிலை ஒபன் செய்யவோ அதில் இருக்கும் லிங்குகளை க்ளிக் செய்யவோ கூடாது. இதை முறையாகப் பாலோ செய்தால் அகிரா மட்டுமின்றி எந்த ரேன்சம்வேரில் இருந்தும் நாம் தள்ளி இருக்கலாம். கூடுதலாக, பயனர்கள் முக்கியமான தரவுகளை பேக்அப் எடுத்து வைக்கலாம். அதுபோன்ற நேரங்களில் சிஸ்டம் ஹேக் ஆனாலும் நாம் அது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. சிஸ்டத்தை முறையாக அப்டேட் செய்து வைப்பது. வலுவான ஆன்ட்டிவைரஸை வைத்திருப்பது ஆகியவையும் நமக்கு உதவும். மேலும், மல்டி ஆத்தென்டிகேஷன், வலுவான பாஸ்வேர்ட்டை வைப்பதும் நம்மை காக்கும். எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் எங்கள் Telegram குழுவில் இணையுங்கள்

எந்த காரணம் கொண்டும் விளம்பரங்களை நம்பியோ அல்லது கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பியோ கல்லூரிகளில் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை இழக்க வேண்டாம்.

என்ஜினியரிங் கல்லூரியில் சேரப்போறீங்க அப்படீன்னா, அல்லது உங்களுக்கு தெரிஞ்வங்க யாராவது இன்ஜினியரிங் கல்லூரியில் சேரப்போறாங்க அப்படீன்னா, தயவு செய்து https://www.tneaonline.org/ தளத்துல போய் பார்த்துட்டு காலேஜ்ஜை முடிவு பண்ண சொல்லுங்க.. 20 சதவீதத்திற்கு மேல் பாஸ் அவுட் உள்ள கல்லூரியில் படிப்பதே நல்லது. எனவே தெரியாமல் போய் மாட்டிக்காதீங்க. என்ஜினியர் ஆக வேண்டும் என்று பலருக்கும் கனவு இருக்கிறது. சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிலர் ஆசைப்படுவார்கள். சிலர் சிவில் என்ஜினியரிங் படிக்க ஆசைப்படுவார்கள். சிலர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்க ஆசைப்படுவார்கள்.சிலர் எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்படுவார்கள். சிலர் ஏரோ நாட்டிக்கல் என்ஜினிரியங் படிக்க ஆசைப்படுவார்கள். என்ன வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் படிக்க முடியும். உயர் கல்வி வசதிகளில் நாம் டாப் தான். ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் எந்த கல்லூரிகளில் பொறியியல் படிப்பு படித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கண்டிப்பாக ஆய்வு செய்து,அதன்பிறகு கல்லூரிகளில் சேருங்கள். நீங்கள் விரும்பும் பாடப்பிரிவு கிடைக்கிறது என்பதற்காக மோசமான கல்லூரிகளில் சேர்ந்து வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள். பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை அந்த கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து சேருவது குறித்து முடிவெடுங்கள். நல்ல தேர்ச்சி விகிதம்உள்ள கல்லூரிகளில் சேருபவர்களுக்கு பிரச்சனை இருக்காது. மாறாக மிக மோசமான தேர்ச்சி விகிதம் உள்ள கல்லூரிகளில் படிக்க போனால் அங்கு உங்களின் கல்வி தரமும் பாதிக்கப்படும். பொறியியல் கல்லூரிகளில் சேரும் முன்பு https://www.tneaonline.org/ தளத்துல போய் பாருங்கள். ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை தேர்ச்சி விகிதம் எப்படி உள்ளது என்பதுகுறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது கடந்த 2022ம் ஆண்டில் எப்படி தேர்ச்சி விகிதம் இருந்தது. எந்த கல்லூரியில் மாணவர்கள் தேர்ச்சி அதிகம் பெற்றுள்ளார்கள் என்ற பட்டியல் இருக்கும். இந்த பட்டியலில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற கல்லூரிகளில் சேர முயற்சி செய்யுங்கள். அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறாத கல்லூரிகள் என்றால் யோசித்து முடிவெடுங்கள்.குறிப்பாக 20 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி விகிதம் உள்ள கல்லூரிகளில் சேர வேண்டுமா வேண்டாமா என்பதையை யோசியுங்கள். மிக குறைவான தேர்ச்சி விகிதம் அதாவது பாஸ் அவுட் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை இழக்க வேண்டாம். அதற்கு பதில் பொறியியல் படிப்பை படிக்காமல் இளங்கலை படிப்பை படிப்பதை சிறப்பானதாக இருக்கும். எனவே இந்த பட்டியலை பார்த்து சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள். எங்கள் Telegram
குழுவில் இணையுங்கள்